;
Athirady Tamil News

யாழில். விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் செந்தூரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.