;
Athirady Tamil News

ஒரே இரவில் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு தாவிய 700 ஏதிலிகள்!

0

ஒரே இரவில் சனிக்கிழமை ( 21), பிரான்சில் இருந்து 702 அகதிகள் பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இதுபோன்ற சட்டவிரோத பயணம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளானர்.

பிரான்சின் பா-து-கலே மாவட்டத்தின் கடற்கரைகளில் இருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பல்வேறு படகுகளில் அகதிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை முன்னதாக கடந்தவார சனிக்கிழமை செப்டம்பர் 14 ஆம் திகதி ஒரே இரவில் 802 அகதிகள் இதுபோல் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தனர்.

இந்நிலையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இவ்வருடம் இந்த கடற்பயணங்கள் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.