;
Athirady Tamil News

மக்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா : வெளியான அதிர்ச்சி தகவல்

0

லெபனானில்(lebanon) மக்களின் வீடுகளில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய குடியிருப்புப் பகுதிகளில், ஒவ்வொரு வீட்டின் படுக்கையறை உள்ளிட்டஅறைகளில், ஆயுதங்கள் இருப்பதற்கான புகைப்படத்தையும், வீடுகளுக்குள் ஆயுதங்கள் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின்போது தெற்கு லெபனானில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கருதிய இஸ்ரேல்(israel), அந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறுமாறு அரபு மொழியில் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்ததாக லெபனான் ஊடகம் தெரிவித்தது.

300 இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்

இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கிவைத்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், லெபனானில். சுமாா் 300 இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

எனினும் இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேல் வீசிய சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்தன.

மக்களின் வீடுகளுக்குள் மிகப்பெரிய ஆயுதங்கள்

இந்த நிலையில்தான், மக்களின் வீடுகளுக்குள் மிகப்பெரிய ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான புகைப்படத்தை இஸ்ரேல் வெளியிட்டு அச்சத்தை அதிகரித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே நேற்று நடத்தியதுதான் கடுமையான தாக்குதலாகும். ஏராளமான பெண்கள், குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியானதற்கு, உலக நாடுகள் கவலை தெரிவித்திருக்கும் நிலையில், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது ஏன் என்பதை விளக்கும் வகையில், இஸ்ரேல் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பது, மேலும் தாக்குதல் தீவிரமடையுமோ என்ற அச்சத்தையே மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.