;
Athirady Tamil News

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பு!

0

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (24) பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

மக்களின் நிலைப்பாடு வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி என்ற ரீதியில் நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை.

இருப்பினும், பொதுத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.