;
Athirady Tamil News

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து

0

இராணுவத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இன்று புதன்கிழமை (25) அதிகாலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன நெரிசல்
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெலவத்தையில் இருந்து பாராளுமன்ற வீதியின் ஊடாக பொரள்ளை நோக்கிப் பயணித்த டிபென்டர் வாகனம் ஒன்று சதுப்பு நிலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது டிபென்டர் வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்துள்ளதாகவும் அவருக்கு காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, இராணுவத்தினரின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இராணுவ வாகனம் சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.