;
Athirady Tamil News

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

0

நேபாளத்தில் (Nepal) இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தின் சில பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நேபாள காவல்துறை

இந்தநிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ள நிலையில், காத்மாண்டுவில் ஒன்பது பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் ஐந்து பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் மூன்று பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.