;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது., 7 பேர் மரணம்

0

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வசிரிஸ்தானில் நடந்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒரு எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் செயலிழந்தது. விமானி அவசரமாக தரையிறங்க முயன்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

உயிரிழந்தவர்களில் 3 ரஷ்ய நாட்டினர், 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சிப்பந்தி அடங்குவர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.