;
Athirady Tamil News

நெடுந்தீவில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த 17 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ள கடற்படையினர் அவர்களை கடற்தொழிலில் நீரியல் வள திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.