;
Athirady Tamil News

யாழில் பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்

0

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை 05 மாத கன்றுத் தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர் , இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , மாட்டினை வெட்டிய குற்றத்தில் மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.