;
Athirady Tamil News

காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு(Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது, காத்தான்குடி – 05, அஹமட் பரீட் மாவத்தையை சேர்ந்த தரம் 11இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது நண்பருடன் காத்தான்குடி- 05, அஹமட் பரீட் மாவத்தை வீதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.