;
Athirady Tamil News

லெபனானை அடுத்து ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்., 4 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி

0

லெபனானில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஏமன் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் ஹவுத்தி இலக்குகள் மீது குண்டு வீசி 12 ஜெட் விமானங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஹோடியா நகர துறைமுகத்தை அழித்தது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை லெபனானின் பல நகரங்களில் இஸ்ரேல் ரொக்கெட்டுகள் மற்றும் குண்டுகளை வீசியது. இத்தாக்குதலில், ஹிஸ்புல்லா மத்திய கவுன்சிலின் துணைத் தலைவர் நபில் காக் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் லெபனானில் மீட்கப்பட்டது. உடலில் காயங்கள் எதுவும் இல்லை. மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏமன் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஹமாஸுக்கு எதிரான போர் தொடங்கி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 21-ஆம் திகதி முதல் முறையாக யேமனில் பல ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள ஹொடெய்டா துறைமுகம் மற்றும் மின் நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர், 87 பேர் காயமடைந்தனர்.

டெல் அவிவ் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

முன்னதாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் கடந்த ஜூலை 19-ம் திகதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் 50 வயதான இஸ்ரேலியர் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில், சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.