;
Athirady Tamil News

பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: தலைமறைவான சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு

0

பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் பெண் பலி
பிரித்தானியாவின் M40 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு Peugeot van மற்றும் 5 கார்கள் மோதிக்கொண்ட இந்த வாகன விபத்தில், சம்பந்தப்பட்ட பெண் உயிரிழந்து இருப்பதாகவும், அவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி தலைமறைவு

இந்நிலையில் Peugeot வேனை ஓட்டிக் கொண்டு வந்த சாரதி தலைமறைவு ஆகிவிட்டதாக வார்விக்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள நபர் ஆகாஷ் என்றும் அழைக்கப்படும் ஆகாஷ்தீப் சிங் என்றும் மேற்கு மிட்லாண்ட், குறிப்பாக Oldbury பகுதியுடன் இவருக்கு சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது டாஷ் கேம் காட்சிகள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.