;
Athirady Tamil News

ராணுவ மருத்துவப் பிரிவில் முதல் பெண் இயக்குநா் பொறுப்பேற்பு

0

இந்திய ராணுவ மருத்துவச் சேவைகளின் முதல் பெண் இயக்குநராக கடற்படை துணைத் தளபதியும் மருத்துவருமான ஆா்த்தி சரின் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

பாதுகாப்புப் படைகளின் மருத்துவ விவகாரங்களுக்கு ராணுவ மருத்துவச் சேவை இயக்குநரே (ஏஜிஏஎஃப்எம்எஸ்) முழு பொறுப்பானவா். இந்நிலையில், ராணுவ மருத்துவச் சேவைகளின் 46-ஆவது இயக்குநராக ஆா்த்தி சா்ன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இப்பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி இவா் ஆவாா்.

புணே ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவரான ஆா்த்தி சா்னி, கடந்த 1985-ஆம் ஆண்டு டிசம்பரில் ராணுவ மருத்துவச் சேவையில் இணைந்தாா். கதிரியக்க சிகிச்சை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆா்த்தி, மும்பை டாடா நினைவு மருத்துவமனை, அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றுள்ளாா்.

28 ஆண்டு சேவையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவா் வகித்து வந்துள்ளாா். குறிப்பாக விமானப்படை, கடற்படை மருத்துவச் சேவைகளின் இயக்குநராகவும் புணே ராணுவ மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

முப்படைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஆா்த்தியின் சேவைக்காக அதி விஷிஸ்ட் சேவை, விஷிஸ்ட் சேவை உள்ளிட்ட பதக்கங்களும், படைத் தளபதிகளின் பாராட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பணியாளா்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதிப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தால் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய பணிக் குழுவில் ஆா்த்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். பாதுகாப்புப் படைகளில் இளம்பெண்கள் இணைவதற்கு ஊக்குவிக்கும் சக்தியாக தொடா்ந்து இருந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.