;
Athirady Tamil News

போதையில் இருந்தவரால் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

களுத்துறை, பண்டாரகமை, குங்கமுவ பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையிலிருந்த நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக நின்றுகொண்டு கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மாமனாரும் மருமகனும் வைத்தியசாலையில்
இதன்போது, அவ்வழியாக சென்ற மாமனாரும் மருமகனும் மது போதையிலிருந்த நபரிடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து மது போதையிலிருந்த நபர் குறித்த வீட்டிற்குள் சென்று அசிட் நிறைந்த போத்தல் ஒன்றை வெளியே எடுத்து வந்து மாமனார் மற்றும் மருமகன் மீது வீசியுள்ளார்.

சம்பவத்தில் வீதியில் பயணித்த மற்றுமொரு நபரும் அசிட் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பண்டாரகமை பொலிஸார், சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.