;
Athirady Tamil News

ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் ஜெய்சங்கர்

0

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இது குறித்து தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.

இந்திய குடியரசுதலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச்செய்திகளை தெரிவித்தேன். இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும்,வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள்.

தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தோம் என்றும் அவ குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.