;
Athirady Tamil News

மேகன் அணிந்திருந்த இளவரசி டயானாவின் வைர மோதிரம் மாயம்: கேள்வி எழுப்பியுள்ள வில்லியம்

0

இளவரசி டயானா, தனது நகைகளில் சிலவற்றை தனது மருமகள்களுக்காக விட்டுச் சென்றிருந்தார். அவற்றில், வைரங்கள் பதித்த ஒரு மோதிரத்தை, ஹரியின் மனைவியான மேகன் தன் கையில் அணிந்திருந்தார்.

இளவரசி டயானாவின் வைர மோதிரம் எங்கே?
இளவரசி டயானாவுக்குச் சொந்தமான, வைரங்கள் பதித்த அந்த மோதிரத்தில், முதலில் மேகன் சில மாற்றங்கள் செய்திருந்தார்.

2019ஆம் ஆண்டு, மன்னர் சார்லசுடைய அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவின்போது அந்த மோதிரம் மேகன் கையில் இருந்தது.

ஆனால், மேகன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது, அவர் கையில் அந்த வைர மோதிரம் இல்லை.

அந்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.

ஆகவே, தன் தாயின் நகைகள் மீது அதீத அக்கறை கொண்டவரான இளவரசர் வில்லியமை அந்த விடயம் கவலையடைய வைத்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில நண்பர்களைக் கொண்டு, தன் தாயின் நினைவாக இருக்கும் அந்த மோதிரம் என்னவாயிற்று என்பதை அறிந்துகொள்ள வில்லியம் முயன்றுவருவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.