;
Athirady Tamil News

Deposit செய்த பணம் Bank Account -ல் வராததால்.., ஆத்திரத்தில் ATM Machine -யை உடைத்த இளைஞர்

0

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு அந்த பணம் வங்கிக்கணக்கில் வராததால் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார்.

ஆத்திரத்தில் இளைஞர்

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் தனது மனைவி வங்கி கணக்கில் ரூ.5,500 -யை டெபாசிட் செய்துள்ளார்.

அப்போது, பணம் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாக ரசீது வந்துள்ளது. ஆனால், அந்த பணமானது வங்கிக்கணக்கில் வந்ததற்கான எந்தவொரு குறுந்தகவலும் வரவில்லை.

இதனால், சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு பணம் வரவில்லை என்ற புகாரை தெரிவித்தார்.

ஆனால், இரண்டு மாதங்களாக தனியார் வங்கி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சாகுல் ஹமீது ஏடிஎம் எந்திரத்தை செங்கல்லால் அடித்து சேதப்படுத்தியுள்ளார். பின்னர், புகாரின் அடிப்படையில் பொலிஸார் சாகுலை கைது செய்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம் எந்திரத்தை சேதப்படுத்தினால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸிடம் சாகுல் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.