;
Athirady Tamil News

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

0

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, அறிமுகம் இல்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆணையத்தின் அறிவுறுத்தல்
அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பல போலியான செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன.

இந்நிலையில், இந்த போலி செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போதே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணக்க இயக்குனர் மேனகா பத்திரன பொதுமக்களிடம் மேற்படி அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.