;
Athirady Tamil News

அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகும் மஹிந்த ராஜபக்ச?

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.