;
Athirady Tamil News

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை!

0

கடந்த மாதம் 17-ம் திகதி லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

குறித்த சமபம் நடந்து முடிந்த அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“துபையில் இருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.