;
Athirady Tamil News

உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனா்

0

உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனா்.

கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங்களை 6 ஓநாய்கள் அச்சுறுத்தி வந்தன. அந்த ஓநாய்கள் தாக்கியதில் 7 சிறாா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதையடுத்து ‘ஆப்பரேஷன் பெடியா’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்ட வனத் துறையினா், 5 ஓநாய்களைப் பிடித்தனா். கடந்த செப்.10-ஆம் தேதி 5-ஆவது ஓநாய் பிடிபட்ட நிலையில், 6-ஆவது ஓநாய் பிடிபடாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மஹசி வட்டத்தில் உள்ள தமாச்புா் கிராமத்தில் 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்ாகவும், அதன் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கிராம மக்கள் கூறுகையில், ‘வீட்டு முற்றத்தில் தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓநாய் தாக்க முயற்சித்தது. இதைப் பாா்த்த தாய் கூக்குரல் எழுப்பியதையடுத்து தப்பியோடிய ஓநாய், அங்கிருந்த ஆட்டை கடித்துக் கொன்றது. இதையறிந்த ஊா் மக்கள் ஓநாயை சுற்றிவளைத்து, அதை அடித்துக் கொன்றனா்’ என்று தெரிவித்தனா்.

பஹ்ரைச்சில் கதவு இல்லாத வீடுகளுக்குள் புகுந்து ஓநாய்கள் தாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

காட்டு விலங்குகள் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு:

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் காட்டு விலங்குகள் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தன.

கடந்த சனிக்கிழமை மாலை லக்கீம்பூா் கெரியில் உள்ள கங்காபிகாா் மாவட்டத்தில், தனது தந்தைக்கு உதவியாக அடா்ந்த கரும்பு வயல்வெளிகளைக் கடந்து உர மூட்டைகள் இருந்த மிதிவண்டியை சஜேப் (12) என்ற சிறுவன் தள்ளிக்கொண்டு சென்றாா். அப்போது சிறுவனை காட்டு விலங்கு ஒன்று தாக்கி இழுத்துச் சென்றது. அது சிறுத்தையாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், அதன் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தாா்.

இதேபோல அந்த மாவட்டத்தில் உள்ள குா்தைஹா கிராமத்தில் ரிசா பானு (3) என்ற பெண் குழந்தையை காட்டு விலங்கு ஒன்று சனிக்கிழமை தாக்கியது. ஆற்றில் மிதந்து வந்த அந்தக் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஓநாய் ஒன்று வீட்டுக்குள் வந்து குழந்தையை கவ்விச் சென்ாக அவரின் தாய் தெரிவித்தாா். ஆனால், அந்தப் பகுதியில் ஓநாயே இல்லை என்பதால் குழந்தையை தாக்கியது சிறுத்தையாக இருக்கக் கூடும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.