;
Athirady Tamil News

வடக்கு அயர்லாந்தில் 43 மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து

0

வடக்கு அயர்லாந்தின்(Northern Ireland) கவுண்டி டவுன் பகுதியில் 43 மாணவர்களுடன் பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, காரோடோர்(Carrowdore) கிராமத்திற்கு அருகே உள்ள பாலிபிளாக் சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துச் சம்பவம்
இந்த விபத்தில், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயணிகள் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் வட அயர்லாந்து நோயாளர் காவு வண்டி சேவை (NIAS), தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

மேலும், வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென்(Hilary Benn), இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.