;
Athirady Tamil News

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா

0

யாழ்ப்பாணம் – சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா 07.10.2024 திங்கட்கிழமை பழைய மாணவியர் சங்கத் தலைவி காயத்திரி குமரன் தலைமையில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷிதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார். வணபிதா எஸ். ஜெபச்செல்வன் ஆசியுரை வழங்கினார்.

கல்லூரியில் 25 வருடங்கள் கடமையாற்றிய ஐவர் பழைய மாணவியர் சங்கத்தாலும் கல்லூரி நிர்வாகத்தாலும் தனித்தனியே தங்கப்பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மரூசலீன் ஸ்பெல்மன், சிறீமைதிலி சின்னப்பு , கவிதா சிவானந்தன், கிருஷாந்தி ஞானகரன், ஜீன் ஒலிவேட் யோகானந்தன் ஆகிய ஐந்து ஆசிரியர்களும் வெள்ளிவிழா ஆண்டுக்கான தங்கப் பதக்கக் கௌரவங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மாணவர் தலைவர் உரைகளும் ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.