;
Athirady Tamil News

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்

0

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார்.

கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர்(09) உயிரிழந்துள்ளார்.

மோடி இரங்கல்
கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றதுடன் அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அற்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மோட்டார் வாகன துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.