;
Athirady Tamil News

காசா பேரவலம்…42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

0

கடந்த ஆண்டு ஒக்டொபர் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பில் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் 45 போ் உயிரிழந்துள்ளதாகவும் 130 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42,010 உயிரிழப்புகள்

புதன்கிழமை நிலவரத்தின் படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 42,010 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 97,720 போ் காயமடைந்துள்ளனா் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டொபர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலானது, தற்போது மத்திய கிழக்கு முழுவதிலும் பரவி பெரும் பேரழிவாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.