;
Athirady Tamil News

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! 6 பேர் வரை காயம்

0

இஸ்ரேலிலுள்ள ஹடிரா நகருக்குள் புகுந்த ஆயுததாரிகள் பொதுமக்கள் மீது நடத்திய கூரிய ஆயுத தாக்குதலில் 6 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்றையதினம் (09.10.2024) இடம்பெற்றுள்ளது.

இருவர் கவலைக்கிடம்
இதன்போது, சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து , தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டு தப்பியோடிய ஆயுததாரிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.