;
Athirady Tamil News

சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய தனியன் யானை

0

தனியன் யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

இன்று காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் தனியன் யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.