;
Athirady Tamil News

நிலத்தில் தென்பட்டது 2ம் உலக போர் குண்டா? அதிர்ச்சியடைந்த நபர்?

0

வெளிநாடொன்றில் சாதாரண நபரொருவர் தனது நிலத்தை தோண்டுபோது வெடிகுண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்ஸ்டாகிராமில் இன்சேன்ரியாலிடிஸ் என்ற கணக்கில் வெளியான அந்த வீடியோவில்,

ஒருநபர் வீட்டுத் தோட்டத்தில் ஆழமாக குழி தோண்டியது காட்டப்படுகிறது. அப்போது ஒருபொருள் தட்டுப்பட, புதையல்போல எண்ணி பக்குவமாக தோண்டியெடுத்தபோது அது சிறிய மருத்துவ கருவிப் பெட்டி போல தெரிந்தது.

செல்லரிக்கத் தொடங்கியிருந்த அந்த பெட்டியை சிரமப்பட்டு அந்த நபர் திறக்கிறார். உள்ளே சிவப்பு நிறத்தில் பக்கத்திற்கு 5 என மொத்தம் 10 பொருட்கள் இருந்தன. அவை வெடிகுண்டு போல தோற்றமளித்ததால் அதிர்ச்சியானார்.

அது தொடர்பான வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர்.

மேலும், கருத்துப் பகுதியில் அது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் தொழில் குண்டு போல இருப்பதாக பலரும் கூறி இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.