;
Athirady Tamil News

இலங்கையில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

0

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக அதிர்ச்சித் தகவலை இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறுவர்களின் உடல் , உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 அல்லது 1333 என்ற மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.