;
Athirady Tamil News

டெல்லியில் ராவண வதம்… குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்தனர்!

0

டெல்லி செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்து, ராவண வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தசரா விழாவின் இறுதி நாளான நேற்று, ஸ்ரீ தர்மிக லீலா கமிட்டி சார்பில் டெல்லியில் ராவண வத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி, ராமர், லட்சுமணர், அனுமர் உள்ளிட்ட வேடம் அணிந்தவர்களுக்கு திலகம் இட்டனர். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ராமாயண நாடகத்தை கண்டு களித்தனர். பின்னர் குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்ய, ராவண வதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் விழாவில் கலந்து கொண்டனர். அவர்களும் ராமர் வேடம் அணிந்தவர்களுக்கு திலகம் இட்டு, அம்பு எய்தி ராவண வதம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.