;
Athirady Tamil News

நீர்க்கட்டணங்களை செலுத்தாத 41 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நிலுவையில் இவ்வளவா?

0

நாட்டில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளிடமிருந்து அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.