;
Athirady Tamil News

ரூ 1.2 கோடி லொட்டரி பரிசு….பூசணிக்காய் விற்று வாங்கிய டிக்கெட்டில் அடித்த அதிர்ஷ்டம்!

0

தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காயை விற்று லொட்டரியில் $150,000 பரிசை வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார்.

$150,000 பரிசு

வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர், தனது தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காய்களை விற்று, அந்த பணத்தில் லொட்டரி டிக்கெட் வாங்கி $150,000(₹1.2 crore) பரிசு வென்றுள்ளார்.

எலிசபெத் சிட்டியைச் சேர்ந்த ராய் ஸ்டோரி(Roy Story) என்பவர், சன் பார்ம்ஸ் கடையில் Xtreme Cashword டிக்கெட்டை வாங்கி, இந்த பரிசை வென்றுள்ளார்.

ஸ்டோரி, தனது தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காயை $10-க்கு விற்று, அந்த பணத்தை வைத்து டிக்கெட் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

கிராஸ்வேர்ட் கேம்களின் ஆர்வலரான ஸ்டோரி, ஆரம்பத்தில் தான் $1,000 மட்டுமே வென்றதாக நினைத்துள்ளார்.

ஆனால், தான் வென்ற உண்மையான தொகையை அறிந்தபோது, ஸ்டோரி உடனடியாக புதிய ட்ரக் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.

லொட்டரி அதிர்ஷ்டம்
ஸ்டோரியின் வெற்றி, அமெரிக்காவில் சமீபத்தில் நிகழ்ந்த லொட்டரி வெற்றிகளின் தொடரின் ஒரு பகுதியாகும்.

மற்றொரு அதிர்ஷ்டசாலியான, மேரிலாந்து மாநிலத்தின் Frederick கவுண்டியைச் சேர்ந்த ஒரு பெண், Powerball Double Play டிக்கெட்டில் $500,000 வென்றார்.

ஃப்ளோரிடாவின் மேற்கு பாம் பீச்சைச் சேர்ந்த 62 வயதான ஜோஸ் டியூரன், $3 மில்லியன் மெகா மில்லியன் ஜாக்பாட் வென்றார். அவர் Supermercados El Bodegon கடையில் $3-க்கு டிக்கெட் வாங்கியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.