;
Athirady Tamil News

கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

0

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (15) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல கல்வி வலயங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (15) மூடப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (13) தீர்மானித்துள்ளனர்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேற்குறிப்பிட்ட கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகள் இன்றும் மூடப்பட்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.