;
Athirady Tamil News

கலாசாலையில் உலக உளநல நாள் நிகழ்வுகள்

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக உளநல நாளை ஒட்டிய சிறப்பு ஒன்று கூடல் இன்று 16.10.2024 புதன் காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது

ஆரம்பக் கல்வி நெறி ஆசிரிய மாணவி ஜெ. சுலோச்சனாதேவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதி பேச்சாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க. கஜவிந்தன் கலந்து கொண்டு எண்ணங்களின் வலிமை என்ற பொருளில் உரையாற்றினார்.

கலாசாலையின் பிரதி அதிபர் க. செந்தில்குமரன் அதிதி அறிமுகவுரையையும் ஆரம்பக் கல்வி ஆசிரிய மாணவன் சி. டனிஸ்ரன் உளநல நாள் என்ற பொருளிலான உரையையும் ஆற்றினர். கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.

கலாநிதி க. கஜவிந்தன் தான் எழுதிய நூல்களின் ஒரு தொகுதியை நூலக பொறுப்பு விரிவுரையாளர் வேலும்மயிலும் சேந்தனிடம் கையளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.