;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கான சம்பள செலவினம் குறித்து வெளியான தகவல்

0

இந்த வருடத்தின் (2024) அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க செலவினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் படி, இந்த வருடத்தின் (2024) முதல் எட்டு மாதங்களில், அரச ஊழியர்களுக்கான சம்பள வழங்குவதற்கான அரசாங்க செலவினம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.7% அதிகரித்துள்ளது.

முக்கிய காரணம்

கடந்த ஆண்டு (2023) முதல் எட்டு மாதங்களில் அரசு ஊழியர் சம்பள செலவினம் ரூ. 61,806.6 கோடியாக பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சம்பள செலவினம் ரூ. 65,950.2 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஜனவரி மாதம் முதல் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூ.5000 அதிகரிக்கப்பட்டமையும் பின்னர் 2024 ஏப்ரல் முதல் குறித்த கொடுப்பனவு மேலும் ரூ. 5000 ஆக அதிகரிக்கப்பட்டமையே சம்பள செலவு அதிகரிக்க பிரதான காரணம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.