;
Athirady Tamil News

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்- பொலிஸார் இடையில் கலந்துரையாடல்!

0

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ் பொலிஸ் நிலைய மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(16) யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் தடுக்கும் முகமாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 51 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

இக்குழுவில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சார்பில் 7 உறுப்பினர்களையும் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்களும் என மொத்தமாக 51 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

மேலும் தேர்தல் பிரச்சார இடங்களுக்கு அனுமதி கோரல், ஒலிபெருக்கி சாதனங்களை பயண்படுத்தும் கால அளவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீமோகன், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.