;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு

0

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூர்யா விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி திரு. சம்லி பலுசேன அவர்களும் உடனிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.