;
Athirady Tamil News

அணு ஆயுத ஏவுகணை பிரிவின் போர்திறனை சோதனை செய்துவரும் ரஷ்யா

0

ரஷ்யா, யார்ஸ் (Yars) எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பொருத்தப்பட்ட ஒரு பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்துவருகிறது.

மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ஒரு பிராந்தியத்தில் யார்ஸ் வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோளிட்டு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இந்த சோதனை மாஸ்கோவின் வடமேற்கு பகுதியில் உள்ள ட்வெர் (Tver) பகுதியில் நடைபெறுவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

யார்ஸ் ஏவுகணைகள், 11,000 கிமீ (6,835 மைல்கள்) வரை வரம்பைக் கொண்டவை மற்றும் பல அணுகுண்டுகளைக் கொண்டு செலுத்தக் கூடியவை.

இந்த யார்ஸ் ஏவுகணைகளை குழிகளில் நிலைநிறுத்தீயும் அல்லது மொபைல் லாஞ்சர்களில் பொருத்தியும் ஏவ முடியும்.

ரஷ்யா, இந்த ஆண்டு பல அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் இன்னும் ஆழமாக தலையிடுவதைத் தடுக்கும் நோக்கில் ரஷ்யா இந்த ஆண்டு தொடர்ச்சியான அணுசக்தி பயிற்சிகளை மேற்கொண்டதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அணு பயிற்சிகள், நேட்டோ அதன் வருடாந்திர அணுஆயுத பயிற்சியை நடத்திய மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது “வெற்றித் திட்டத்தை” வெளியிட்ட அதே வாரத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.