;
Athirady Tamil News

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

மத்திய – கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் மேற்குறிப்பிடப்பட்டோர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை

அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.