;
Athirady Tamil News

அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்ட விருந்தில் வெடித்த மோதல்: அலறியடித்து ஓடிய மக்கள் ..மூவர் உயிரிழப்பு

0

அமெரிக்க மாகாணம் மிசிசிபியில் பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.

மிசிசிபி மாகாணம் Lexington பகுதியில் பாடசாலை கால்பந்து வெற்றிக் கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 முதல் 300 பேர் கலந்துகொண்டனர்.

அப்போது இருதரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 வயதுடைய இருவர் மற்றும் 25 வயதுடைய நபர் என மூவர் கொல்லப்பட்டனர்.

மேலும் 8 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.