;
Athirady Tamil News

யாழில். 10 லீட்டர் கசிப்புடன் நபர் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 10 லீட்டர் கசிப்பை மீட்டதுடன் , அதனை விற்பனைக்கு வைத்திருந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.