;
Athirady Tamil News

கடவுச்சீட்டு வரிசைக்கு முடிவு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

0

கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நிலுவையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு
விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகச்வும் அவர் கூறினார்.

இந்நிலையில், தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.