;
Athirady Tamil News

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு

0

லெபனானில்(lebanon) செவ்வாயன்று(22) ஹிஸ்புல்லாவுடன் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட வீரர்களில் ஒருவர் – மேஜர் (ரெஸ்.) அவிராம் ஹரிவ், (42), அலோன் பிரிகேடின் 9308 வது பட்டாலியனின் துணைத் தளபதி, டோலேவ் – தெற்கு லெபனானில் நடந்த சண்டையின் போது கொல்லப்பட்டார்.

மற்றயவர் மாஸ்டர் சார்ஜென்ட் (res.) டெல் அவிவில் இருந்து 7338 வது “அடிரிம்” பீரங்கி படைப்பிரிவின் 508 வது பட்டாலியனைச் சேர்ந்த சார் எலியாட் நவர்ஸ்கி, 27 – வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மூன்று வீரர்கள் படுகாயம்
சரமாரியான ரொக்கெட் தாக்குதலில் பீரங்கி படைப்பிரிவின் மற்ற மூன்று வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை செவ்வாயன்று 65 ரொக்கட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.