;
Athirady Tamil News

பெங்களூரு கட்டட விபத்து: ஒருவர் பலி; 14 பேர் மீட்பு!

0

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இவ்விபத்தில் 20 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரை காணவில்லை” என்று காவல் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“நகரத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று இச்சம்பத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 23)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.