;
Athirady Tamil News

880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு

0

தன் காதலனிடம் 30 மில்லியன் டொலர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த பணத்தை அடைவதற்காக அவருக்கு விஷம் வைத்துக் கொன்றார் ஒரு பெண்.

ஆனால், அவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது!

சொத்து கிடைக்கும் என்று விஷம் வைத்த பெண்
அமெரிக்காவின் North Dakotaவைச் சேர்ந்தவர் இனா (Ina Thea Kenoyer, 48).

தனது காதலரான ஸ்டீவனுக்கு (Steven Edward Riley Jr, 51) 30 மில்லியன் டொலர்கள் ( இலங்கை மதிப்பில் 8,80,31,73,000.00 ரூபாய்) சொத்து கிடைக்க இருப்பதாக கூறும் ஒரு மின்னஞ்சல் இனாவுக்கு கிடைத்துள்ளது.

ஆகவே அந்த பணத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் இனா.

ஒருநாள், ஸ்டீவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிக வெப்பம் காரணமாக heat stroke என்னும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருத்துவ உதவியை உடனே அழைக்காமல் விட்டுள்ளார் இனா.

ஸ்டீவன் உயிரிழக்க, அவர் எக்கச்சக்கமாக குடித்ததால் அவருக்கு heat stroke என்னும் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறியிருந்தார் இனா.

உடற்கூறு ஆய்வில் தெரியவந்த உண்மை
ஆனால், உடற்கூறு ஆய்வில், ஸ்டீவன் உடலில் சொட்டுக்கூட மதுபானம் இல்லை என்பது தெரியவந்தது.

ஸ்டீவனின் நண்பர்கள், இனா ஸ்டீவனுக்கு விஷம் கொடுப்பது குறித்து அடிக்கடி ஜோக்கடிப்பது உண்டு என சாட்சியமளித்தார்கள்.

அதேபோல, ஸ்டீவனுடைய இரத்தத்தில் நச்சுப்பொருள் ஒன்று இருப்பதும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

விசாரணையின்போது, ஸ்டீவனுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், அதனால்தான் தான் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் தெரிவித்தார் இனா.

கிடைத்த ஏமாற்றம்

விடயம் என்னவென்றால், ஸ்டீவனுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் சொத்து கிடைக்க இருப்பதாக கூறிய மின்னஞ்சல் போலியானதாகும்.

ஆக, பணம் கிடைக்காமல் ஏமாந்ததுடன், 25ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்துள்ளது இனாவுக்கு. அத்துடன், கொல்லப்பட்ட ஸ்டீவன் குடும்பத்தினருக்கு இனா 3,455 டொலர்கள் இழப்பீடு செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசையால் பத்து ஆண்டுகள் காதலித்த காதலரையும் இழந்து, சிறையில் கம்பியும் எண்ணிக்கொண்டிருக்கிறார் இனா!

You might also like

Leave A Reply

Your email address will not be published.