;
Athirady Tamil News

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி சந்திப்பு!

0

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலவலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.