;
Athirady Tamil News

எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

0

எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தப்போகும் தாக்குதலை முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள தாட் ஏவுகணை பொறிமுறை அமைப்பில் வேலை இல்லை எனவும் இஸ்ரேலை(israel) ஈரான்(iran) அழிக்கும் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர் ஹொசைன் சலாமி(Hossein Salami) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய (russia)அரசு செய்தி நிறுவனமான TASS இதனைத் தெரிவித்துள்ளது.

THAAD ஐ நம்ப வேண்டாம்
“இஸ்ரேல் மீதான ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2 தாக்குதலின் போது அரோ ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் வேலை செய்யாதது போல், THAAD அமைப்பும் வேலை செய்யாது. THAAD ஐ நம்ப வேண்டாம், அதற்கு வரையறுக்கப்பட்ட திறன்கள் உள்ளன, ”என்று சலாமி மேற்கோள் காட்டினார்.

இஸ்ரேல் மீதான தனது ஒக்டோபர் 1 பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை “ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2” என்று ஈரான் அழைக்கிறது, கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலைது அது “ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 1” என்று அழைக்கிறது.

நாங்கள் உங்களை அழிப்போம்
THAAD, ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை அமைப்பு, அமெரிக்க இராணுவத்தின் அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளின் முக்கியமான பகுதியாகும், இது இஸ்ரேலின் ஏற்கனவே வலிமையான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

“இந்த மோதலை உங்களால் வெல்ல முடியாது, நாங்கள் உங்களை அழிப்போம்” என்று சலாமி மிரட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.