;
Athirady Tamil News

அமெரிக்க இராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: தென் கொரியாவில் ஏற்பட்ட பதற்றம்

0

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ தளம்

தென் கொரியாவின் புசான் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Yonhap வழங்கிய தகவல் படி, குறிப்பாக மாலை 6.31 மணியளவில் Beomil-dong, Dong-gu, Busan-யின் 55வது சப்ளை டிப்போவில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 55வது சப்பை டிப்போ என்பது புசான் துறைமுகத்தில் இருந்து அமெரிக்க படைகளால் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் சேமித்து வைக்கும் இட வசதியாகும்.

இந்த விபத்தானது அமெரிக்க இராணுவ வசதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்டுள்ளது.

இதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் கண்டறியப்பட வில்லை, அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.