;
Athirady Tamil News

அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி!

0

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

“நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவின் தகவலின் பேரில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்த ஆண்டாக தாம் அடுத்த வருடத்தை மாற்றியமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.