;
Athirady Tamil News

கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்

0

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்து, ஏறாவூர் குடியிருப்பு பகுதியில் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியை சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே தொடருந்தில் மோதி மரணமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.